districts

img

சிபிஎம் ஆத்தூர் தாலுகாச் செயலாளராக ஏ.முருகேசன் தேர்வு

சேலம், அக்.20- மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத் தூர் தாலுகாச் செயலாளராக ஏ. முருகேசன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா 24  ஆவது மாநாடு, ஆத்தூர் பகுதி யில் சுதந்திர போராட்ட வீரர்  சங்கரய்யா, தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆகி யோரது நினைவரங்கத்தில் சனியன்று நடை பெற்றது. மூத்த தோழர் கந்தசாமி செங் கொடியை ஏற்றி வைத்தார். தாலுகாக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாசலம் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை தாலுகாக் குழு உறுப்பினர் எஸ்.பிரபு வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன். ரமணி துவக்கவுரையாற்றினார். அறிக் கையை தாலுகாச் செயலாளர் ஏ.முருகேசன் முன்வைத்தார். சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், ஆத்தூரில்  அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை 1792 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வரலாற்று நினைவுக்கோட்டையை சுற்று லாத் தலமாக தமிழக அரசு அறி வித்து பாதுகாக்க வேண்டும். ஆத் தூர் பகுதியில் மரவள்ளி உற் பத்தியை அதிகப்படுத்தும் வகை யில், சேக்கோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆத்தூர் அரசு மருத்து வமனை தரம் உயர்த்த வேண்டும். கல் லான் நத்தம், முட்டல் நீர்வீழ்ச்சி, படகு இல் லத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் ஆத்தூர் தாலுகாச் செயலாளராக ஏ.முருகேசன் 8  தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் குணசேகரன் நிறைவுரையாற்றி னார். தாலுகாக்குழு உறுப்பினர் சி.மாரிமுத்து  நன்றி கூறினார்.