தருமபுரி, ஏப்.9- தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்குசே கரிப்பில் ஈடுபட்டார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி அரூர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட கிராமங்களில் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனி யப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செய லாளர்கள் இ.டி.டி.செங்கண்ணன், ரத்தினவேல், பேரூராட்சி தலைவர் வடமலைமுருகன், மகளிரணி அமைப்பாளர் கவிதா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழ கன், விசிக மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா, சிபிஎம் நிர்வாகிகள் மாதேஷ், ஆணஸ்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர் ஆ.மணி பேசுகையில், அரூர் மற்றும் மொரப்பூர் பகுதி விவசாயம் சார்ந்த பகுதியா கும். எனவே, நீர்பாசன திட்டத்தை மேம்படுத்த ஈச்சம்பாடி ஆணையில் இருந்து நீர் ஏற்றம் செய்து, அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும். செனாக் கல் பாசன திட்டம் நிறைவேற்றப்படும். மேலும், இப்பகு தியில் சேகோ தொழிற்சாலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்ப டும் என வாக்குறுதி அளித்தார்.