districts

img

சிபிஎம் பென்னாகரம் பகுதிச் செயலாளராக ஆ.ஜீவானந்தம் தேர்வு

தருமபுரி, நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் பென் னாகரம் பகுதிச் செயலாளராக ஆ.ஜீவானந்தம் தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்குழுவின் 11 ஆவது மாநாடு, பென்னாக ரம் முத்து கவுண்டர் மங்கமாள் திருமண மண்டபத்தில் தோழர் சீத்தாராம் யெச் சூரி நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப் பினர்கள் எஸ்.செல்லன், கே.அன்பு, பகு திக்குழு உறுப்பினர்கள் இ.அயோத்தி, எம்.வளர்மதி ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் பி.இராமன் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஜே.சரண்யா அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். பகுதிக்குழு உறுப்பி னர் ஏ.சேகர் வரவேற்றார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.மாதன் துவக்கவுரை யாற்றினார். பகுதிக்குழு செயலாளர் வி.ரவி,  மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.ஜீவானந்தம் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ. அருச்சுணன், எம்.முத்து ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், காவேரி உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப  வேண்டும். பென்னாகரம் வட் டத்தில் தொழிற்பேட்டை ஏற்ப டுத்த வேண்டும். தாசர்குந்தி பகுதி விவசாயிகளுக்கு நிலப் பட்டா வழங்க வேண்டும். இக்கிராமத்தில் செல்போன்டவர், கால்நடை  மருத்துவமனை அமைக்க வேண்டும். கள்ளி புரத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு  வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.  அளேபுரம் முதல் பொச்சாரம்பட்டி வரை  பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும். மடம் கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பென்னாக ரம் பகுதிச் செயலாளராக ஆ.ஜீவானந்தம் மற்றும் 13 பகுதிக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் சுதா பாரதி நன்றி கூறினார்.