உதகை, ஜூன் 27- கடைவீதியில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெலாக் கோட்டை ஊராட்சியில் உள்ள நெலாக் கோட்டை கடை வீதியில் காலை வணி கர்கள் வழக்கம் போல கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொண் டிருந்தனர். இந்நிலையில், கேரள மாநி லம் வயநாடு மாவட்டத்துக்கு உள்பட்ட மாநில எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த வர்கள் புதனன்று தங்களுடைய அன்றா டப் பணிகளுக்காக கூடலூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒற்றை காட்டு யானை நெலாக் கோட்டை கடை வீதி பகுதிக்கு வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இந்த யானை கடை வீதி வழியாக நடந்து சென்று எதிரே வந்த ஒரு காரை தாக்கிய தும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்ற தால் அதிலிருந்தவர்கள் உயிர் தப்பி னர். பின்னர், நீண்ட தொலைவு நடந்து சென்ற யானை அருகே உள்ள காபி தோட்டத்துக்குள் சென்றது. இதேபோன்று, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட் பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டம் கிராத் தில், நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கிராமப் பகுதிக்குள் உலா வந் துள்ளது. அப்போது, அந்த பகுதியில் மோகன் என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்த அரிசி, பருப்பு மற்றும் உணவு தின்பண்டப் பொருட்களை தேடி கடையை முற்றிலும் சூறையாடியது. யானை மளிகை கடைக்குள் புகுந்துள் ளதை அறிந்த கடையின் உரிமையா ளர் மற்றும் அப்பகுதி மக்கள் சத்தமிட்டு, காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு முழுவதும் கிராமப் பகுதியை விட்டு வெளியேறா மல் யானை குடியிருப்பு பகுதிக்கு மத்தி யில் முகாமிட்டிருந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. வனத்துறையினர் இரவு நேரங்க ளில் ரோந்துப் பணிகளை மேற் கொண்டு, கிராமப் பகுதிக்குள் நுழை யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்து றைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.