கோவை, பிப்.9- காருண்யா பல்கலை கழகத்தில், மாணவர்களால் பயிரி டப்பட்ட தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்த நிலை யில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வனப்பகுதி யில் விரட்டினர். கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்ற னர். இந்த கல்லூரியில் வேளாண்துறை பயிலும் மாண வர்கள் கல்லூரி பின்புறம் உள்ள வேளாண் தோட்டத்தில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு பயின்று வருகின்றனர். இந்நிலையில் சனியன்று மாலை வேளாண் தோட்டத் திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டி யானை அங்கு பயிரிடப் பட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.