districts

பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானை

ஈரோடு, மே 17- கடம்பூர் வனப்பகுதியிலிருந்து வெளி யேறும் காட்டுயானை, விளைபயிர்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக் குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடை வெப்பத்தால் வனப்பகுதி தனது பசு மையை இழந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறுகின் றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்ட முயன்றால் தாக்குவதற்காக துரத்துகின்றன. இந்நிலை யில், கடம்பூர் வனப்பகுதியிலிருந்து அடிக் கடி வெளியேறும் ஒற்றை காட்டுயானை செங் காடு, பூதிக்காடு, ஏரியூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது வரை ஏக்கர் கணக்கில் சோளம், வாழை உள் ளிட்ட பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ள தாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே 13 ஆம் தேதியன்று அந்தியூர்  பகுதியில் புகுந்த இந்த யானை ஒரு கொட் டகையை முட்டி தள்ளி சேதப்படுத்தியது. இதற் கிடையே செவ்வாயன்று மாலை கடம்பூரை அடுத்த எக்கத்தூர் பகுதியில் வெள்ளையப் பன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டுயானை தென்னை மரம், பாக்கு மரங் களை சேதப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் தாளவாடி பகுதியில் கருப்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடு பட்டது போல் டி.என்.பாளையம் பகுதியில் இந்த யானை உள்ளதாக தெரிகிறது. எனவே கடம்பூர் மலைப்பகுதி அருகே பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானையை வனத் துறையினர் பிடித்து, அடர்ந்த வனப்பகுதி யில் கொண்டு விட வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.