கோவை, டிச.20- தோலம்பாளையம் அருகே பயிரிடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப் படுத்தியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து அமைந் துள்ளது தோலம்பாளையம் கிராமம். இங்கு வாழை, தென்னை போன்றவை பிரதானமாக விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. இக்கிராமம் மலை அடிவாரம் அருகே அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப் படுகின்றன. அவ்வாறு, வனத்தை விட்டு வெளியேறும் விலங் குகள், கிராமத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. அந்த வகையில், தோலம்பாளையம் அருகே ஆதிமா தையனூர் விவசாய பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானை கள், மாணிக்கராஜ், மூர்த்தி ஆகியோருக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி யது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.