districts

img

சாலையின் நடுவே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவை, ஜுன் 24- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் நெடுஞ்சாலையில் கல்லார் என்னுமிடத்தில் சாலையின் நடுவே பெரிய மரம் சாய்ந்ததால் சுமார் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் நெடுஞ்சாலையில், மலையடிவாரமான கல்லார் வரை உள்ள சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்ந் துள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும். இவை பெரும் பாலும் மிக உயரமாக வளர்ந்த பழமையான மரங்களாக உள்ளன. இந்த மரங்கள் பலத்த காற்று மற்றும் மழைக் காலங்களில் சாலையில் விழுந்து விடுகின்றன. 50 முதல் 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சாய்ந்து விழும் நிலை யில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுபப்பட்டு வருகிறது.  இந்நிலையில், திங்களன்று காலை இச்சாலையில் கல்லார் என்னுமிடத்தில் சாலையோரம் இருந்த பழமை யான புங்கை மரமொன்று சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. மரம் சாய்ந்த போது வாகனங்கள் ஏதும் கடந்து செல்லவில்லை என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ வில்லை. தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப் பாளையம் தீயணைப்புத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மரத்தை அறுவை இயந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.