districts

சாலை விபத்தில் வாலிபர் பலி

காஞ்சிபுரம், மார்ச் 5-  காஞ்சிபுரத்தை அடுத்த வயலூர் கிராமம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் சரவணன் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கி ளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.