districts

img

கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் குறித்து மிசோராம் அதிகாரிகள் குழு மேட்டுப்பாளையத்தில் ஆய்வு

மேட்டுப்பாளையம், ஆக.25- கூட்டுறவு விற்பனை சங்க செயல் பாடுகள் குறித்து மிசோராம் மாநில  அதிகாரிகள் குழுவினர் மேட்டுப்பா ளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் இயங்கி வரும் கூட்டுறவு  விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மிசோராம் மாநில அதிகாரி கள் ஞாயிறன்று கள ஆய்வு மேற்கொண் டனர். மிசோராம் மாநில தோட்டக்கலைத் துறை சிறப்பு செயலர் ராம்தின் லைனி தலைமையில், அம்மாநிலத்தை சேர்ந்த  தோட்டக்கலைத்துறை உதவி இயக்கு நர்கள் லாலியான் சுவாலா, ராபர்ட்  லால்ரின்சங்கா, கூட்டுறவு சங்கங்களின்  துணை பதிவாளர் வான்ஸ்லுபுயா, தோட்டக்கலை துறை மார்க்கெட்டிங் பிரிவு உதவி இயக்குனர் ஜூலி, நில வளங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு துறை உதவி இயக்குநர் லால் ரெம்ருதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உதவி இயக்குநர் ரொனால்ட் லால்ச்சு அனாவ்மா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்பின் மேட்டுப்பாளையம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள உதகை உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பூண்டு ஏல விற்பனை மையத்தை பார் வையிட்டனர். அங்கு, நீலகிரி விவசாயி கள் கொண்டு வரும் மலைப்பூண்டு மற் றும் கிழங்கு ஏலம் விடுவது குறித்து  கள ஆய்வு மூலம் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் செயல்பாடுகள், உரு ளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் விதம், இயங்கும் விதம், ஏலம் விடும்  முறை குறித்து அவர்கள் விளக்கமாக கேட்டறிந்தனர். இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு சங் கங்களின் இணைப்பதிவாளர் தயாளன்  கூறுகையில், மிசோராமில் கூட்டுறவு விற் பனை சங்கத்தை செயல்படுத்த, சிறந்த  கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை  கள ஆய்வு மூலம் விபரங்களை சேக ரித்து அங்கு செயல்படுத்த திட்டமிட்டு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் பற்றி  சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு மிசோராம் அதிகாரி கள் இங்கு வந்துள்ளனர். மேலும், நீல கிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப் பாட்டில் உள்ள மேட்டுப்பாளையம் விற் பனை சங்கங்களை பார்வையிட்டு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட் டங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர், என்றார்.