districts

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தேயிலை கண்காட்சி

உதகை, மே 20- தென்னிந்தியாவில் முதன்முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 30 அரங்குகளு டன் தேயிலை கண்காட்சி அமைக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா வானது துவங்கி, மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு மட்டு மின்றி, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று லாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சியும் நடைபெற்றது. தற்போது உதகையில் 125 ஆவது மலர்க் கண்காட்சி வெள்ளியன்று துவங்கி, நடை பெற்று வருகிறது. இந்நிலையில், தென்னிந் திந்தியாவில் முதல்முறையாக தேயிலை கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடை பெற்றது. இக்கண்காட்சியினை மாநில சுற் றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சனியன்று திறந்து வைத்தார். தென்னிந்திய தேயிலை வாரியம் மற் றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தேயிலை கண்காட்சியில் டேன்டீ, இன்கோ சர்வ், கொடநாடு உட்பட 30 அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அரங்கி லும் விதவிதமான தேயிலைத்தூள் காட்சிப் படுத்தப்படது. அது மட்டுமின்றி சுற்றுலா பய ணிகள் தேயிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், குறும்படம் காட்சிப்படுத்தப்பட் டது. பெரிய அளவில் அரங்கு அமைத்து சுற் றுலா பயணிகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்பட்டது. இதில் ஆட்சியர் சா.ப.அம் ரித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நுழைவு கட்டணம் உயர்வு

உதகை அரசு தாவரவியல் 125 ஆவது மலர்க்கண்காட்சி வெள்ளியன்று துவங் கியது. மலர்க்கண்காட்சியை காண ஏரா ளமான சுற்றுலா பயணிகள் குவிந்து  வரும் நிலையில், பூங்காவிற்கான நுழைவு கட்டணம் இரு மடங்காக உயர்த்தபட்டுள்ளது. பெரியவர்களுக் கான நுழைவு கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.100 ஆக உயர்த்தபட்டுள்ளது. ரூ.30 ஆக இருந்த சிறியவர்களுக்கான நுழைவு கட்டணம், ரூ.50 ஆக உயர்த்தபட்டுள்ளது. இத னால் குடும்பம், குடும்பமாக வரும் சுற் றுலா பயணிகள் நுழைவு கட்டணம் அதி களவு கொடுத்து, மலர்க்கண்காட்சியை காண முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள் ளது.