districts

img

திருப்ப்பூரில் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிர்ணயம்

திருப்பூர், டிச.27- 2024-25 ஆம் ஆண்டில், வளம் சார்ந்த  கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.37, 834.40 கோடிகளாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் திருப்பூர் மாவட்டத் தின் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்து ராஜ் வெளியிட்டு கூறுகையில், திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி  கிளைகளின் மூலம், 2024-25 ஆம் ஆண் டில், வளம் சார்ந்த கடன் வழங்குவதற் கான இலக்கு ரூ.37,834.40 கோடிகளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு  நடப்பு 2023-24 ஆம் ஆண்டு இலக்கை விட 52.62 சதவிகிதம் அதிகமாகும். விவ சாயத் துறை, நுண் சிறு மற்றும் குறு  நிறுவனங்கள், கல்வி மற்றும் வீட்டுத்  துறைகளுக்கான கடன்கள் தேவை யற்ற தாமதமின்றி வழங்கப்பட வேண் டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங் களை நபார்டு வங்கியின் மூலம் விளக்க மளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப் பூர் மாவட்டத்தில் எதிர்வரும் 2024-25  ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும்  வேளாண்மை சார்ந்த துணைத்தொழில் களுக்கான கடன் ரூ.12,208.17 கோடிக ளாகவும், நுண் சிறு மற்றும் குறு தொழில் களுக்கான கடன் ரூ.22,479.52 கோடிக ளாகவும், ஏற்றுமதிக்கு ரூ.1,053 கோடி களாகவும், கல்வி கடனுக்காக ரூ.501.39 கோடிகளாகவும், வீடு கட்டுதல் மற் றும் மீள்சக்தி ஆகியவற்றுக்கு முறையே ரூ.393.75 கோடி மற்றும் ரூ.435. 07 கோடிகளாகவும், ரூ.718.40 கோடி  மகளிர் சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக்குழு இதர கடனுதவிகளும், ரூ.45.09 கோடி சமூக கட்டமைப்பு பணி களுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. இவ் வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் ரவி, இந்திய  ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலா ளர்  அமிர்தவள்ளி, மாவட்ட வளர்ச்சி  மேலாளர் (நபார்டு வங்கி) அசோக்கு மார் மற்றும் அனைத்து வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.