districts

img

சிறார்களுக்கு கதை சொல்லும் நிகழ்வு

அவிநாசி,மார்ச்.9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  திருமுருகன் பூண்டி மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவிநாசி கிளை இணைந்து நடத்தும் சிறார்களுக்கான கதை சொல்லும் நிகழ்வு சனியன்று நடை பெற்றது. இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் அவிநாசி கிளைத் தலைவர் நீரோடை மகேஷ் தலைமை வகித்தார். சங்கத்தின் திருமுருகன்பூண்டி கிளை  நிர்வாகி  அருணாசலம் வரவேற்றார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ராமமூர்த்தி வாழ்த்தி  பேசினார். முனைவர் ஈரோடு சர்மிளா குழந்தைகள் மத்தியில்  கதை சொல்லி மகிழ்வித்தார். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட  இணைச் செயலாளர் அஜித் குமார் அறிவியல் சார்ந்த நிகழ்வு களை குழந்தைகள் மத்தியில் நிகழ்த்தி காட்டி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். இறுதியாக சங்கத்தின் நிர்வாகி சூர்யா  நன்றி கூறினார். இந்த நிகழ்வை ஆசிரியர் சுசீலா தொகுத்து  வழங்கினார். பலர் கலந்து கொண்டனர்.