மணிப்பூர் வன்முறை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டப்பட்டி மலைகமிட்டி தலைவர் அண்ணா மலை தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மலை கமிட்டி செயலாளர் சேரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.