கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் பொதுச்செயலாளரும், திருங் செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய நிதியமைச்சர் நாடாளு மன்றத்தில் செவ்வாயன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், விவசா யிகள், சிறு, குறு தொழில் முனைவோர், சாமானியர்கள் என்று எந்த சாராருக்கும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கப்பட வில்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டை முழுமையாக புறக் கணித்திருக்கிறது. இது இந்தியாவிற்கான பட்ஜெட்டா அல்லது ஆந்திராவுக்கும், பீகாருக்குமான பட்ஜெட்டா என்று கேட்கும் அளவிற்கு அரசியல் பட்ஜெட்டாக, ஆட்சியை தாங்கி பிடிக்கின்ற கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டி ருக்கிறது. இந்திய மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு விஷ யத்திற்கும் நிதியமைச்சர் பதில் சொல்லவில்லை. ஜிஎஸ்டி வரி யினால் அந்தத் துறையின் சார்பாக தொழிற்சாலைகளுக்கும், வியாபாரிகளுக்கும் கொடுக்கப்படுகிற தொந்தரவுகளுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் போல ஒரு வரி அறிவிப்புகளாக பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் எப்படி செயல்படுத்த போகின்றோம் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. நடுத்தர மக்களுக்கு வருமான வரியில் எந்த சலுகையும் இல்லை. ஆனால், வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வரிச்சலுகை 5 சதவிகிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த வருவாயான ரூ.32 லட்சம் கோடியில் ரூ.12 லட்சம் கோடி வாங்கிய கடனுக்கான வட்டி என்பது பயமுறுத்துகிறது. மூலதன செலவு ரூ.11 லட்சம் கோடி யாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகபட்சமாக ஆந்திராவுக் கும், பீகாருக்கும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களை யுமே ஏமாற்றியிருக்கிறது.