districts

img

இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

கோவை, ஜூலை 22- மருதமலை அருகே நள் ளிரவில் ஊருக்குள் ஒற்றை யானை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந் தனர்.  கோவை மாவட்டம், மருதமலைப் பகுதியில் ஏரா ளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. இந் நிலையில், வெள்ளியன்று இரவு  மருதமலை  வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை  ஆண் காட்டு யானை ஒன்று கல்வீரம் பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை ஊருக்குள் வந்ததை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப் பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட் டனர். முன்னதாக, குடியிருப்புகள் நெருக்க மாக உள்ள கல்வீரம்பாளையம் பகுதியில் இந்த ஒற்றையானை நுழைந்தால், இதனை அறியாது வெளியே வரும் மக்களை யானை  தாக்கி உயிர்ப்பலி ஏற்படும் என்பதை முன் னர்ந்த வனத்துறையினர், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு  வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சாலை நடுவே சென்ற  யானை அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து நின்றது. தொடர்ந்து நீண்ட நேர வனத்துறையினரின் போராட்டத்திற்கு பிறகு யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட் டினர்.