districts

img

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் உதகை, பிப்.18- உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மூட்டை மூட் டையாக வைத்திருந்த கடைக்கு நகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வு செய்து, ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சீல் வைத்தனர். 65 சதவீத வனப்பகுதி உள்ள நீல கிரியின் சுற்றுச்சூழல் தனித்தன் மையை பாதுகாப்பதற்காக நீல கிரி மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 19  வகையான பிளாஸ்டிக் பொருட்க ளுக்கான தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தடையை மீறி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பிளாஸ் டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரி கள் என அனைவரும் மாவட்டம் முழுவதும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாநி லத்திலிருந்து நீலகிரி வரும் வாகனங்களில் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது  இந்நிலையில், உதகை நகராட்சி சந்தையில் உள்ள மொத்த விற்பனை கடையில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமையில் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு சொந்தமான காரில் சோதனை செய்த போது விற்பனைக்காக  மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதை பறிமுதல் செய்த தோடு வாகனத்தில் பிளாஸ்டிக் வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.