தரமற்ற முறையில் கட்டப்பட்ட வணிக வளாகம்
கோவை, டிச.7- அன்னூரில் பேரூராட்சியில் கட்டப்பட் டுள்ள வணிகவளாகம் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக வணிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி பகுதியில் மொத்தமாக 27 வார்டுகள் உள் ளன. இந்நிலையில், அன்னூர் பேரூராட்சிக் குட்பட்ட வாரச்சந்தை மற்றும் ஓதிமலை சாலை பகுதியில் ரூபாய் 5.50 கோடி மதிப் பீட்டில் மூலதன மானிய நிதியின் கீழ் 56 வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள் ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இந்த வணிக வளாக கட்டிடங்களை திறந்து வைத்தார். கடந்த மார்ச் மாதம் வணிக வளாக கட்டிடங்களுக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், வணிகர்கள் கடை ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை ஏலத்தொகை செலுத்தி கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவை புறநகரப் பகுதிக ளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. இதில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் நீர் கசிந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வணிகர்கள் வணிக வளாகத்தின் மேற்புறம் சென்று பார்த்த போது முறையாக மேல் தளம் அமைக்காதது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வணிகர் கள் அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலரி டம் சென்று கோரிக்கையாக வைத்த நிலை யில் அதற்கு அதிகாரி எந்தவிதமான பதிலும் அளிக்காதது வேதனையை ஏற்படுத்துவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்நோக்கு மருத்துவ முகாம்
கோவை, டிச.7- பொள்ளாச்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம் சனியன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார் பில் தூய்மைப் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 300க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் கணேஷன், நகர்மன்ற துணைத்தலை வர் கௌதம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோன்று, கோவை மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ புரம், கணபதி, சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், உக்கடம், விளாங் குறிச்சி, உப்பிலிபாளையம், கவுண்டம்பாளையம், ஹவு சிங் யுனிட் உள்ளிட்ட 13 இடங்களில் தூய்மைப் பணியாளர் களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ முகாம் கள் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கண பதி ப.ராஜ்குமார், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநக ராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
கோபி
ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 283 தூய்மைப் பணியாளர் களுக்கான பல்நோக்கு சிகிச்சைக்கான மருத்துவமுகாம் தனி யார் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் ஆணையா ளர் சுபாஷினி, துப்புரவு அதிகாரி சோழராஜ் சுகாதார ஆய் வளார் நிருபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு கர்ப்பிணியின் உடல் மீட்பு
சேலம், டிச.7- வாழப்பாடி அருகே வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணியின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு (27). இவரது மனைவி மோக னாம்பாள் (19). கடந்த டிச.1 ஆம் தேதியன்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இதனால் மனமுடைந்த, 6 மாத கர்ப் பிணியான மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்திலிருந்து வசிஷ்ட நதியில் குதித்தார். இவரைத் தொடர்ந்து, இவ ரது கணவர் ராமுவும் ஆற்றில் நதியில் குதித் தார். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக் கள், நள்ளிரவு நேரத்தில் உயிருக்குப் போரா டிய ராமுவை உயிருடன் மீட்டனர். ஆற்றில் குதித்த கர்ப்பிணி மோகனாம்பாள் வெள்ளத் தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப் பாடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரி வித்தனர். தொடர்ந்து 4 நாட்கள் தேடியும், ஆற் றில் வெள்ளம் குறையாததால் மோகனாம் பாளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சனியன்று அதிகாலை வசிஷ்ட நதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் ஆற்றின் கரையில் மோகனாம்பாள் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதைய டுத்து போலீசார், தீயணைப்புப் படையினர் உதவியுடன், மோகாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவரை வீட்டிற்கு சென்று அழைத்து வந்த கல்வி அலுவலர்
நாமக்கல், டிச.7- பள்ளிக்கு வராத மாணவ ரின் வீட்டிற்கு சென்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அழைத்து வந்த சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி யில் வெள்ளியன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, இப் பள்ளியில் பயின்று வரும் 7 ஆம் வகுப்பு மாணவர் கதிர் வேலன், நீண்ட நாள்களாக பள்ளிக்கு வராமல் இருப் பது தெரியவந்தது. இதைய டுத்து மகேஸ்வரி, பள்ளி பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் மணி ஆகியோருடன், மாண வரின் வீட்டிற்கு சென்று அவ ரது பெற்றோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, உடல் நலக்குறைவு காரணமாக மாணவர் பள்ளிக்கு வருவது இடைநின்றது தெரிய வந் தது. இதையடுத்து மாணவ ருக்கும், அவரது பெற்றோ ருக்கும் கல்வி கற்பதால் ஏற் படும் நன்மைகள் குறித்து மகேஸ்வரி விளக்கமளித் தார். உடல்நலக்குறைவு ஏற் பட்டதால் அதற்கான மருத்து வா்களை ஆலோசித்து சிகிச்சை பெறும்படியும், பள் ளிக்கு தொடர்ந்து வந்தால் தான் மற்ற மாணவர்களுடன் பழகும் வாய்ப்புகளும், அறி வும் தன்னம்பிக்கையும் ஏற் படுமென அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர் கதிர் வேலனை பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பில் அமர வைத்த கல்வி அதிகாரி, அவருக் கான சீருடைகள், புத்தகங் களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.