ஈரோடு, மார்ச் 27- கரும்பு வெட்டும் தொழி லாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழி லாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் பவானி சங்க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் இ.கே.முருகன் தலைமையில் நடை பெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பு ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பொதுத்துறை ஆலைகள், தனியார் ஆலைகள், கூட்டுறவு ஆலைகள், மற்றும் குண்டு வெல்லம் தயாரிக்கும் கிரஷர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர். இத்தொழிலாளர்கள் எந்த விதமான பணி பாதுகாப்புமின்றி வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமிநாடு முழுவதும் உள்ள கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு அடை யாள அட்டை உடனடியாக வழங்கிட வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு முழு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான பிரிமியத்தொகையை ஆலை நிர்வாகமே செலுத்திட வேண்டும். இத்தொழி லாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்திட வேண்டும். அரசு தனியாக நிதி யகத்தை உருவாக்க வேண்டும். சமூக நலத் திட்டத்தை அமலாக்க வேண்டும். விபத்து மற்றும் உடல் பாதிப்புகளுக்கு அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசு மற்றும் ஆலை நிர்வாகமே வழங்கிட வேண்டும்.
பாம்பு கடித்த அல்லது விஷப்பூச்சி கடித்து மரணம் அடைந்தால் அவரது குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பணித்தளங்களில் மாட்டு கொட்டகைகளில் தங்க வைப்பதை கைவிட்டு ஆலை நிர்வாகமே குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். பண் டிகை காலங்களில் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இத் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்க மாதாந்திர கூட்டம் நடத்தப்பட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை விளக்கி ஏப்ரல் 10 முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழு வதும் உள்ள அனைத்து கரும்பு ஆலைகளில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது என்றும், அதன்பிறகு அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்ல தீர் மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் கு.வே.சொக்கநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன், பவானி எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட மாநில நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.