districts

img

காலமானார்

கோவை, நவ. 13- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், 20 ஆண்டு களுக்கு மேலாக தீக்கதிர் நாளி தழை விநியோகித்து வந்தவரு மான தோழர் ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் செவ் வாயன்று காலமானார். கோவை பீளமேடு நகரக் குழுவிற்குட்பட்ட ஆவாரம் பாளையம் பகுதியைச்சேர்ந்த வர் தோழர் ராமகிருஷ்ணன். ஆவாரம்பாளையம் தெற்கு  வீதிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கிளையில் உறுப்பி னராக இருந்து வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து  வர்க்க வெகுஜன இயக்கங்களிலும் பங்கேற்பார். மேலும்,  கோவை 28 ஆவது வட்டத்திற்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதி முழுவதும்   தீக்கதிர் நாளிதழை சுமார் 20 ஆண்டு களுக்கு மேலாக, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது  இறுதி நாட்கள் வரையிலும் கட்சியின் நாளிதழ் என்கிற அக் கறையோடு விநியோகம் செய்து வந்தார்.  இந்நிலையில், உடல் நலக்குறைவால் தோழர் ராம கிருஷ்ணன், செவ்வாயன்று காலமானார். இவரின் மறைவு  தகவலறிந்து, ஆவாரம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத் திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள், சிங்கை,  பீளமேடு நகரக்குழுவினர் மற்றும் தீக்கதிர் விநியோகிப் பாளர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.