ஈரோடு மாவட்டம், வாய்க்கால் பாளையம், ஐம்பை புதூர், சின்னியம்பாளையம், பெரிய மோளபாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர், கழிவறை, சாக்கடை, வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை: விதொச மனு
பொள்ளாச்சி, ஜூலை 4- அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை, பொள் ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனுவாக அளித்தனர்.
அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அட்டை வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நிதி யாண்டில் பயனாளிகளுக்கு வேலை வழங்கபடுவதற் காக குறிப்பிட்ட வேலைகள் குறித்த விவரத்தை வழங்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்துள்ளது. இதனை பழுது நீக்கி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், விதொச பொள்ளாச்சி தாலுகா செய லாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை
நாமக்கல், ஜூலை 4- கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை சார்பில், பரமத்தி வேலூரில் கிராமப்புற சேவை பல் மருத்துவமனை வியா ழனன்று திறந்து வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், பரமத்திவேலூரில் கிராமப்புற சேவை பல் மருத்துவமனையை, அதன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற வருமானவரி அதிகாரி வேலுச்சாமி முன்னிலை வகித் தார். இதில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மோகன், குழந்தைவேலு, கேஎஸ்ஆர் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சரத் அசோ கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலையில் வீணாகும் தண்ணீர்
கோபி, ஜூலை 4- கோபி அருகே கூட்டுகுடிநீர் குழாய் உடைப்பு ஏற் பட்டு 10 நாட்களாக சாலையில் வீணாகுவதால் அதிகாரி கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றிலிருந்து வெள்ளாளபாளையம் - வெள் ளாங்கோவில் கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக நீரேற்று நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை நீருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரித்து பாரியூர், வெள்ளாளபாளையம், பொலவக்காளிபாளை யம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், நாகதேவம் பாளையம், வெள்ளாங்கோவில் ஆகிய 7 கிராம பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு நஞ்ச கவுண்டம்பாளையம், அத்தாணி சாலை பவளமலை வழியாக நிலத்தடியில் கொண்டு செல்லப்படும் குழாய் கள் அத்தாணி சாலையில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது. இதனால், பொதுமக்களுக்கு செல்லும் குடி நீரின் அளவும் குறைந்துள்ளது. இதுகுறித்து தமி்ழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்க ளுக்கு செல்லும் குடிநீர் சாலையில் வீணாகி சாலை சிதில மடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங் களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீர் செல்வது தெரியமால் சாலையில் சறுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
உதகை, ஜூலை 4- கூடலூர் அருகே கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற கூடலூர் போலீசார் சோதணை நடத்தினர். அங்கு இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதை உறுதி செய்தனர். பின்னர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில், அவர்கள் முஹம்மது ரியாஸ் (22), நிஷார் அகமது (19) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து கூடலூர் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
குறைதீர் கூட்டம
தருமபுரி, ஜூலை 4- தருமபுரி கோட்டாட்சி யர் ரா.காயத்ரி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி வருவாய் கோட் டத்திற்குட்பட்ட வட்டங்க ளைச் சேர்ந்த விவசாயிக ளின் குறைகளை தீர்ப்பதற் கான கூட்டம் வெள்ளியன்று (இன்று) முற்பகல் 11 மணி யளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறு கிறது. இதில் விவசாயிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை
சேலம், ஜூலை 4- சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தாதகாபட்டி அருகே உள்ள சஞ்சீவிரா யன்பேட்டை, மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (54). கடந்த 2011 – 2016 வரை சேலம் மாநகராட்சி யின் அதிமுக மண்டலக்குழு தலைவராக இருந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு அம்பாள் ஏரி சாலை பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இந் நிலையில், புதனன்று இரவு, ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப் போது, தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நட மாட்டம் இல்லாத பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவ லறிந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து சண்முகத்தின் உடலை மீட்டு போலீ சார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? அல்லது தொழில் போட்டியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மின்தடை
நாமக்கல், ஜூலை 4- நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி யன்று (இன்று) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வெள்ளியன்று (இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர் பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்க வேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம், மெட்டாலை, கோரை யாறு, தொ.ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.