districts

img

தியாகிகள் நினைவுச் சுடருக்கு ஊத்துக்குளியில் எழுச்சிமிகு வரவேற்பு

திருப்பூர், டிச.10- அகில இந்திய விவசாயிகள் சங்க  மாநாட்டுக்கு கொண்டு செல்லப்ப டும் தி்யாகிகள நினைவுச் சுடருக்கு திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங் கத்தின் 35 ஆவது மாநாடு கேரள  மாநிலம் திருச்சூரில் டிசம்பர் 13 முதல்  16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு கொண்டு செல்லப் படும் தெலுங்கானா வீரர்கள், சேலம்  சிறைத் தியாகிகள், வெண்மணி தியா கிகள் நினைவுச் சுடர்கள் பயணக் குழு வெள்ளிக்கிழமை இரவு திருப் பூர் மாவட்டத்திற்கு வந்தது. மாவட்ட எல்லையில் இந்த தியாகிகள் சுடர்  பயணக்குழுவினருக்கு உற்சாக மான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.குமார்,  சிஐடியு மாவட்ட  துணை தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜி. சம்பத், மாவட்ட துணைச் செயலாளர்  ஜெ.கந்தசாமி, விவசாயத் தொழிலா ளர் சங்க தாலுக்கா தலைவர் க.பிர காஷ் ஆகியோர் பயணக்குழு தலை வர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். மோள இசை முழக்கத்துடன் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ ஊத் துக்குளி நகருக்கு இந்த குழுவினர் அழைத்து வரப்பட்டனர்.

பயணக் குழுவிற்கு பாரதி நகர் மாதர் சங்கத் தினர் ஆரத்தி எடுத்து உற்சாகப்ப டுத்தினர்.  இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு விவசாயிகள் சங்க வட்டச் செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் வரவேற்றார். விவசா யிகள் சங்க அகில இந்திய இணைச்  செயலாளர் விஜூ கிருஷ்ணன், கேரள  மாநிலத் தலைவர் பிரகாசம் மாஸ்டர்,  விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்  தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர்.  வெண்மணி மற்றும் தெலுங் கானா நினைவுச்சுடர் குழுவில் வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ணபிரசாத், துணைத்தலைவர் எஸ்.கே.பிரிஜா, தெலுங்கானா மாநில செயலாளர் சாகர், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைத் தலைவர் எஸ்.துரை ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் எஸ்.பரமசி வம் நன்றி தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக் குளி, அவிநாசி, மங்கலம், இடுவாய்,  பல்லடம் ஆகிய இடங்களில் நடை பெற்ற வரவேற்பு  நிகழ்வில் திரளா னோர் கலந்து கொண்டனர்.