districts

img

ரூ.20 கோடி செலவில் குந்தா அணையை தூர்வார திட்டம்

உதகை, ஜன.21- குந்தா அணையை ரூ.20 கோடி  செலவில் தூர்வார புதிதாக திட்ட மிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா மின்  வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை  1961 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த அணை 89 அடி உயரம் கொண் டது.     முக்கிய அணையாக கருதப் படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தேயிலை, மலை காய்கறி தோட் டங்கள் உள்ளன. பருவ மழை காலங் களில் அந்த வழியாக அடித்து வரப் படும் சேறு, சகதி, மரத்துண்டுகள், தாவரங்கள் உள்ளிட்ட கழிவுகள் அணையில் வந்து சேகரமாகிறது. இந்நிலையில், அணை உருவாக் கப்பட்ட காலத்திலிருந்து சுமார்  60 ஆண்டு காலமாக தூர்வாரப் படாததால், அணையின் மொத்த நீர் மட்ட உயரத்தில் சுமார் 40 அடி தூரம்  சேரும், சகதியுமாக காணப்படுகிறது.  மேலும் சுமார் 5 டன் அளவுக்கு  விறகுகள் மட்டும் உள்ளே இருக்க லாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ராட்சத குழாய்கள் மூலம்  மற்ற அணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற் பத்தி செய்யும் போது, வழக்கமான மின் உற்பத்தி செய்ய முடியாமல் தொய்வு ஏற்படுகிறது.  

அணையை தூர்வாரி கழிவு களை, அணையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள குந்தா  மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப்பட் டது. ஆனால், கழிவுகளை கொட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம்  கைவிடப்பட்டது.  எனவே, புதிய முறையில் கழிவு களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ள தாக குந்தா மின்வாரியத்தினர் தெரி வித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, இதற்கு முன்பு பொக் லைன் மற்றும் கிரேன் வாகனங்கள் மூலம் கழிவுகளை அகற்றி கனரக வாகனங்கள் மூலம் அருகில் உள்ள  மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப் பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எனவே, அந்த திட்டத்தில் மாற்றம்  செய்து, தற்போது செலவுகளை குறைக்கும் வகையில் புதிய திட்டம்  தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அணை யில் உள்ள கழிவுகளை, நேரடியாக  அணையில் இருந்து உறிஞ்சி, உபரி  நீர் வெளியேறும் பகுதி வழியாக கடத்தப்படும். இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு மத்திய நீர்வள ஆணையம் மூல மாக உலக வங்கிக்கு பரிந்துரை செய் யப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத் ததும், டெண்டர் விடப்பட்டு அடுத்த  6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப் படும் என்றார்.