பள்ளிபாளையம், ஏப்.30- ராசிபுரம் அருகே செயல்படும் திருவள்ளு வர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயி லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால், மே 2 ஆம் தேதியன்று (நாளை) போராட்டம் நடைபெற உள்ளதாக மாணவர் சங்கம் அறிவித்துள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே செயல்படும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பணிபுரி யும் பேராசிரியர் ஒருவர், முதலாமாண்டு மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ராசிபுரம் மகளிர் காவல் நிலை யத்தில் கடந்த ஏப்.27 ஆம் தேதியன்று பாதிக் கப்பட்ட மாணவிகள் புகாரளித்தனர். இச்சம்ப வம் குறித்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பேராசிரியர் சுந் தரமூர்த்தி தலைமறைவாகி விட்டதாக கூறப் படுகிறது. இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி மாணவி கள் பாலியல் புகார் குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரி கள் இதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, அந்த பேராசிரியருக்கு உறு துணையாக இருந்து வருகிறார்களா? என்ற அச்சம் எழுகிறது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்ய வேண்டும். கல் வித்துறை அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், காவல் துறை அதிகாரிகள் சம் பந்தப்பட்ட பேராசிரியரை உடனடியாக கைது செய்யவில்லை என்றால், மே 2 ஆம் தேதி யன்று (நாளை) கல்லூரி முன்பு இந்திய மாண வர் சங்கம் தலைமையில் மாணவர்கள் மற் றும் பெற்றோர்கள் என அனைவரையும் ஒருங் கிணைத்து மாபெரும் போராட்டம் நடைபெ றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.