districts

img

வழக்கு தொடுத்த நிலையில் பணிந்த தனியார் வங்கி

நாமக்கல், ஆக.10- அதிகவட்டி செலுத்துமாறு கட் டாயப்படுத்திய தனியார் வங்கி மீது பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அசல் சான்றுகளை நீதிமன்றத்தில் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (61). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  ராசிபுரத்தில் உள்ள தனியார் நுண் கடன் வங்கியில் அவரது வீட்டின் அசல் ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம்  கடன் பெற்றுள்ளார். கடன் பெறும் போது ஆவணங்களுக்கான கட்ட ணம் ரூ.6300 என கூறிய வங்கி, ரூ.13,850 எடுத்துக்கொண்டது. மேலும், ஆண்டொன்றுக்கு 13 சத விகித வட்டி என கூறிவிட்டு, 24 சத விகித வட்டி வசூலிக்கப்பட்டுள் ளது. கடனை திரும்ப செலுத்தும் காலம் 48 மாதங்கள் எனக்கூறி விட்டு, 60 மாதங்கள் என மாற்றி விட்டனர் என்றும் பல புகார்களை  கூறி, மயில்சாமி நாமக்கல் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2021  ஆம் ஆண்டு வங்கி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே வழக்கு நிலுவை யில் உள்ள போதே வங்கியில் பெற்ற கடன் அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை செலுத்தி விட்ட தாக நீதிமன்றத்தில் மயில்சாமி தெரி வித்ததோடு, அசல் ஆவணங்களை தரவும் அடமானத்தை ரத்து செய் யவும் வங்கி மறுக்கிறது என புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்கறிஞர் மா.ராஜ்குமார் என்ப வரை சமரசராக பேச்சுவார்த்தை நடத்த நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிபதி வீ.ராமராஜ் கடந்த திங்களன்று உத்தரவிட்டிருந்தார். நுகர்வோர் சமரச மையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரச ஒப்பந்தம் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு உடனடியாக கடன் பெற்றி ருந்தவர் வங்கியில் கொடுத்திருந்த  அசல் கிரைய ஆவணம், வருவாய்த் துறை ஆவணங்கள் உட்பட ஆறு  ஆவணங்களும், கடன் பெற்றவ ரால் வங்கிக்கு உத்தரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட இரண்டு காசோ லைகளும் கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழும் வங்கி  தரப்பில் நீதிமன்றத்தில் ஒப்படைக் கப்பட்டது. இவற்றை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ.ராமராஜ் வழக்கு தாக்கல் செய்த  மயில்சாமி யிடம் வழங்கினார். இந்த பேச்சு வார்த்தையின் போது புகார்தாரரின் வழக்கறிஞர் தனசேகரன், வங்கி தரப்பு வழக்கறிஞர் அமுதவல்லி ஆகியோர் உடனிருந்தனர்.