சூலூர், மே 25- காவல்துறை அதிகாரியின் இல்ல திரு மண நிகழ்வில் மும்மத குருமார்கள் இணைந்து சிவபுராணம் மற்றும் திருக்குரான் வசனங்கள் ஓதி மணமக்களை வாழ்த்திய சம் பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச் சியை ஏற்படுத்தியது. தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர், கடந்த 10 ஆண்டுக ளாக எஸ்ஐசி எனப்படும் மதம் சார்ந்த பிரச் சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண் ணறிவு பிரிவில் பணியாற்றி வந்தார். காவல் துறையில் எஸ்ஐசி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த போது மதம் சார்ந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண் டுள்ளார். மதம் சார்ந்த பிரச்சனைகளை சுமூக மாக பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சமர சப்படுத்தியுள்ளார். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும் கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற் காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விரு தைப் பெற்றுள்ளார். இதனிடையே எம்மத மும் சம்மதம் என்ற எண்ணத்தில் மும்மத குரு மார்கள் முன்னிலையில் தனது மகளின் திரும ணத்தை நடத்தியுள்ளார் டிஎஸ்பி வெற்றிச் செல்வன்.
வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினி. இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் கோவை சூலூர் பகுதியில் தனியார் அரங்கில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம், சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ் மற்றும் கிருத்துவ பாதிரியார்கள் பங்கேற்று வாழ்த்தி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில், காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மாந கர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் தினர். தொடர்ந்து மணமேடையில் மதகுரு மார்கள் சிவபுராணம் மற்றும் திருக்குரான் வச னங்கள் ஓதி மணமக்களுக்கு வாழ்த்து தெரி வித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்தவர் களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்க ளைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப் பது, இவரின் மத நல்லிணக்கத்திற்கு பொது மக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பை யும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களுடன் அச்சடிக்கப்பட்ட இவர்க ளது திருமண பத்திரிக்கை ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பி டத்தக்கது.