அவிநாசி, பிப்.11- அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட காந்திபு ரம் பகுதியில், புதிய பகுதி நேர நியாய விலை கடையை சனியன்று நீலகிரி மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திறந்து வைத் தார். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட எம்ஆர்பி லேஅவுட் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு பூங்கா மற்றும் காந்திபுரம் பகு தியில் புதிய பகுதிநேர நியாய விலை கடை நீலகிரி மாவட்ட எம்.பி.,ஆ.ராசா திறந்து வைத்தார். இதையடுத்து, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் 33 கிராம அருந்ததி யர் மக்களுக்கு சொந்தமான காலி இடம் உள் ளது. இதில், மண்டபம் கட்டித் தர கோரி அவிநாசி வட்ட அருந்ததியர் சமூக மட அறக் கட்டளை சார்பில் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்தை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, பேராசிரியர் அன்பழ கன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அம்மாபாளை யம் 27 ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு ரூ.36.30 லட்சமும், ராக்கி யாபாளையம் 13 ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.42.10 லட்ச மும், அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி யில் உள்ள துவக்கப்பள்ளிக்கு ரூ.30.23 லட்சமும், அவிநாசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.30.10 லட்சமும், அவிநாசி ஒன்றியம் செம்பிய நல்லூர் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.30.14 லட்சமும், அவிநாசி ஒன்றியம் நம்பியம் பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.30.20 லட்சமும், நிதி ஒதுக்கி திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, மாவட்ட பொரு ளாளர் சாமிநாதன், பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.