districts

img

திருநங்கையாக மாறியதால் ஆத்திரம்: கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்

சேலம், ஆக.20- திருநங்கையாக மாறியது பிடிக் காததால் ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுக்கும் பெற் றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட திருநங்கை உட்பட பலர் சேலம் ஆட்சியர் அலு வலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட னர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சோழதரம் பகுதி யைச் சேர்ந்தவர் வராகி. இவர் திரு நங்கையாக மாறியதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத னால் வீட்டை விட்டு வெளியேறிய வராகி, சேலம் மாவட்டம், செவ்வாய் பேட்டை பகுதியில் தனியாக சுற்றித் திரிந்தார். இதனையறிந்த அப்பகு தியைச் சேர்ந்த திருநங்கைகள் அவரை மீட்டு அடைக்கலம் அளித் தனர். இந்நிலையில், செவ்வாய் பேட்டையில் வராகி இருப்பதைய றிந்த பெற்றோர், செவ்வாய் பேட்டை பகுதிக்கு வந்து சக திரு நங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வராகியை அனுப்பி வைக் குமாறு கேட்டுள்ளார். அதற்கு வராகி மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, வராகியை தங்களுடன் அனுப்பி வைப்பதற்கு செவ்வாய்பேட்டை பகுதி திருநங்கை கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறி சூரமங்கலம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் விசா ரணை நடத்தியதில் திருநங்கை  வராகி பெற்றோருடன் போக மறுப்பு தெரிவித்துடன், செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள திருநங்கைகளுடன் வாழ விருப்பம் தெரிவித்தார். விசா ரணை முடிவில் காவல்துறையினர் வராகியை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக்கூறி பெற்றோரை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வராகியின் பெற் றோர் ரவுடிகளை வைத்து திரு நங்கைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படு கிறது. இதுகுறித்து சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையத்தில் திருநங்கை கள் புகாரளித்தும் எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த திரு நங்கைகள் செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலறிந்து வந்த சேலம் நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட திரு நங்கைகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படை யில், திருநங்கைகள் போராட் டத்தை கைவிட்டனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், திருநங்கை வராகி எங்களுடன் வாழ விருப்பம் தெரி வித்து எங்களுடன் வசித்து வருகி றார். ஆனால், அவரது பெற்றோர்  ரவுடிகளை வைத்து வராகியையும், எங்களையும் கொலை செய்து விடு வதாக மிரட்டல் விடுத்து வருகின்ற னர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றனர்.