districts

img

புகைப்பட கலைஞரின் புதிய முயற்சி

கோவை, ஆக. 12- சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த  புகைப்பட கலைஞர் ஒருவர் புதிய முயற்சியால் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் பாலச்சந்தர்  என்பவர், கணினி திரையில் தேசியக் கொடியை மிகப் பெரிய தாக வைத்து, ஒரு நபர் அதை நெருங்கிப் பார்க்கும்படி செய்து,  அவரது கண்களில் கொடியின் பிரதிபலிப்பை மிக அருகில்  சென்று மொபைல் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படங் கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்த படைப்பு, தேசியக்  கொடியின் மீதான அன்பை வித்தியாசமான கோணத்தில்  வெளிப்படுத்தியுள்ளது. பாலச்சந்தர் எடுத்த புகைப்படங்கள்  மற்றும் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து, அதிகம் பகிரப் பட்டு வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் பலர் இவரது புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.