மேட்டுப்பாளையம், செப்.4- மேட்டுப்பாளையம் நகராட்சி அரசு பள்ளியில் ரூ.21 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவி யல் ஆய்வகத்தை மாணவ, மாணவி களின் கல்வி பயன்பாட்டிற்கு ஆ. ராசா எம்.பி திறந்து வைத்தார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29 ஆவது வார்டு மணி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப் பள்ளியில் 6 ஆவது மாநில பகிர்வு நிதி திட்டத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகத்தை பள்ளி மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற் காக நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா புதனன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பறை கட்டுவ தற்கான பணிகளையும், ரூ. 17.30 லட் சம் மதிப்பில் பள்ளியின் சுற்றுச்சு வர் கட்டுவதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார். இதனை யடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட 30 ஆவது வார்டு சாந்தி நகர் பகுதியில் புதிதாக ரூ. 38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங் காவை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். மேலும், நக ராட்சியின் 2 ஆவது வார்டில் ரூ. 32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பொழுது போக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா வினையும் மக்களின் பயன்பாட் டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது மேட்டுப் பாளையம் நகராட்சித் தலைவர் மெஹரீபா பெர்வின், நகராட்சி ஆணையர் அமுதா உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்டனர்.