அவிநாசி, டிச.13 – திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்ததை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கேற்ப அலுவலர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படாத தால் மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட பல வேலைகள் செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை (இன்று) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளது. பழமையும், புதுமையும் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநக ராட்சிக்கு மிக அருகில் திருமுருகன்பூண்டி உள்ளது. இங்கு தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழ மையான முருகன் கோயில் உள்ளது. இப்பகு தியில் சிற்பக் கலைக்கூடங்கள், பனியன் தொழிற்சாலைகள் பெரிய அளவில் செயல் படுகின்றது. இந்த நிலையில் சுமார் 20 ஆண்டு களுக்கு மேலாக பேரூராட்சியாக செயல் பட்டு வந்தது. இதில் மக்கள் தொகை அடிப் படையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவு டன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியாக 15 வார்டுகளுடன் இருந் தது, நகராட்சியாக தரம் உயர்த்தியபின் 27 வார்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டது.
யாருக்காக அலுவலகம்?
அதன்பின் நகர்மன்ற தேர்தல் நடை பெற்று மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய் யப்பட்டனர். ஆனால் பல மாதங்கள் கடந்த பின்னும், இந்த நகராட்சியில் பல பிரிவுக ளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. பொதுமக்கள் வசதிக்கேற்ப நகர்மன்ற அலு வலகத்தை தற்போது உள்ளபடியே, பூண்டி பேருந்து நிறுத்தம் அருகில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பெரும்பாலா னோர் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த நிர்வாகம், பொதுமக் கள் சென்று வர பொருத்தம் இல்லாத இடத் திற்கு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். யாருக்காக இந்த அலுவ லகம் என இது மக்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் குழாய் முறைகேடு இந்த நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வேண்டி ஆயிரக்கணக்கானோர் நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர்.
இருப் பினும் நகராட்சி நிர்வாகம் உரியபடி புதிய குடி நீர் இணைப்பு வழங்காமல், இணைப்புக்காக பொதுமக்களை காத்திருக்க வைக்கிறது. ஆனால் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், பலஆயிரம் குடிநீர் இணைப்புகள் முறை கேடாக வழங்கப்பட்டன. இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யாக போராட்டம் நடத்தி, அந்த இணைப்புக ளுக்கு அபராத கட்டணம் வசூலித்து முறைப் படுத்தச் செய்துள்ளது. இதன்மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மேலும் முறைகேடான குடிநீர் இணைப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி உள்ளாட்சி நடுவர் மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மனு அளித் தது. இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் மன்றம், முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்ததுடன், சம்பந்தப்பட்டோர் மீது நடவ டிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. எனினும் நகராட்சி நிர்வாகம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் எவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள், இந்த பிரச்சனை குறித்தும், பல்வேறு மக்கள் பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர் வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள் ளாமல் இருக்கிறது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுரு கன் பூண்டி நகராட்சிக் கிளைகள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள் ளனர்.
கவுன்சிலர்கள் சொல்வதென்ன?
இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுப்ரமணியம் கூறுகையில், “நகர்மன்றக் கூட்டத்தில் அலு வலர்கள், நகர்மன்றத் தலைவர் பயன்பாட் டிற்காக வாகனம் வாங்குவது குறித்து மன்றப் பொருள் வைக்கப்பட்டது. அதன் மீது நடை பெற்ற விவாதத்தில், தெருக்களில் குப்பை அள்ளுவதற்கு, தனியாரிடம் ஜேசிபி இயந் திரங்கள், டிராக்டர்கள் வாடகைக்கு எடுக்கப் பட்டு வருகிறது. அதற்கு பதிலாக சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கு செவி சாய்க்கவில்லை. தற்போது மூன்று கார் கள் வாங்கி நகர்மன்ற அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒரு வாக னம் வாங்கியிருக்கலாம். ஆனால் மூன்று வாகனம் தேவையா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. இதுபோல பல லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுகின்றது, என்றார். அதேபோல, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் தேவராஜன் கூறுகையில், “மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை, வார்டு பகுதிகளில் சாலை வேலை, பைப் லைன் பதிப்பது, போன்றவை போதிய அளவீடு எடுக்காமல் தோராயமான அளவு மட்டுமே மதிப்பீடு செய்கின்றனர்.
எனவே எந்த வேலையும் முழுமையாக முடிப்பதில்லை. நகராட்சியாக தரம் உயர்த் தப்பட்டு அலுவலர்களை நியமிப்பதில் தாம தம் காட்டி வருகின்றனர். மேலும், நகராட்சியில் அலுவலர்களை நியமிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி உண்ணா விரதம் அறிவித்த பின்பு, நகராட்சி மண்டல நிர் வாக இயக்குநர் இங்கு அலுவலர்களை நிய மிப்பதாக கூறியிருப்பது, வெறும் கண்து டைப்பாகவே உள்ளது, என்றார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பார்வதி சிவக்கு மார் கூறுகையில், இந்நகராட்சியின் முக்கிய பகுதியாக 22 ஆவது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. அரசு பள்ளி, காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள் ளிட்டு பல அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், எனது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18 லட்சம் மட்டுமே. மற்ற வார்டு உறுப்பினர்களுக்கு, ரூ. 30 லட்சத்துக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளனர். இவ்வாறு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதால், இதன் பின்பு கூடுதலாக ரூ.10 லட்சம் ஒதுக்கி யுள்ளனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, போதுமான நிதி இல்லை, கூடுதல் நிதி பெறுவதற்கு போராடி வாங்கும் சூழ்நிலை உள்ளது, என்றார்.
குவிந்து கிடக்கும் பிரச்சனைகள்
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, “நகராட்சி பகுதிகளில் உள்ள மயானங்களுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், நல்லாற்றை தூய்மைப்படுத்த வேண்டும், ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும், ராசா கோவில் குளத்தை தூய்மைப்படுத்தி நடை மேடை பூங்கா அமைக்க வேண்டும், உழவர் சந்தை இரண்டு பகுதியாக ஏற்படுத்தித் தர வேண்டும், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருக்கிறது. இதுகுறித்து எவ் வித பார்வையும் இல்லாமல் நகராட்சி நிர்வா கம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித் துத்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றி யச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தியிடம் கேட் டபோது, அவசரகதியில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி திருமுருகன்பூண்டி. தரம் உயர்த்திய ஒரு வருடத்தில், மக்கள் தேவை களை பூர்த்தி செய்ய முடியாத நிர்வாகமாக தற்போதைய நிர்வாகம் செயல்படுகிறது, புதிய மனை அங்கீகாரத்திற்கு மக்கள் தினம் தோறும் நடக்க வைக்கப்படுகிறார்கள். எண் ணற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடிய வில்லை. லஞ்ச லாவண்யமற்ற, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக்கூடிய நகராட்சி நிர் வாகமாக செயல்படுத்த வேண்டும் என உண் ணாவிரத போராட்டம் நடத்துகிறோம் என் றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்ட போது, பொது சுகாதாரம், முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், வீடுகளுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், நகராட்சி பணிகள் பலவற்றை தனி யாருக்கு கொடுக்கும் அரசாணையை 152-ஐ வாபஸ் பெற வேண்டும், நகராட்சியில் மின் மயானம் அமைக்க வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களே, பேப்பர் பென்சில் வாங்குவ தில், பிளக்ஸ் பேனர் வைத்ததில் லட்சம் ரூபாய் நிதி எடுத்துள்ளனர். இதை நகர்மன்ற கூட்டத்திலேயே வெளிப்படையாக தெரி வித்துள்ளனர். இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டுவரும் நகராட்சி நிர்வாகத்தை கண் டித்து, புதனன்று (இன்று) உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார். மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மேலே கூறியுள்ள அனைத்து காரணங்களும் இங்கு வாழும் மக்கள் மனங்க ளில் எழும் கேள்விகளாக, கோரிக்கைகளாக உள்ளன. எனவே நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இந்த போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர் என்று இந்த நகராட்சியைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கட்சியினர் கூறினர். (அருண்)