உடுமலை, அக்.24- அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக் கத்தக்க ஆண் புலி, வாயில் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்க ளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமரா வதி என இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், அமராவதி வனச் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் திங்க ளன்று மாலை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அமராவதி வனச்சரகத்திற் குட்பட்ட கழுதகட்டி ஓடைப்பகுதியில் புலி ஒன்று வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட் டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதி காரிகள் புலியை பார்த்தபோது உயிரிழந்த புலிக்கு 9 வயது இருக்கும் ஆண் புலி என்பது தெரியவந்தது. மேலும், புலியின் வாயில் காயங்கள் இருந்ததால் வேட்டையாடுபவர் களால் புலி கொல்லப்பட்டதா? அல்லது இயற் கையாக உயிரிழந்ததா? என்பது குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப் பக இயக்குநர் ராமசுப்பிரமணியம் கூறுகை யில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கோவை மண்டல வனப்பகுதிகளில் கிட்டத்தட்ட 11 புலிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப் பதாக உள்ளது. தற்போது உயிரிழந்த புலி யின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பிறகு புலியின் உயி ரிழப்புக்கு காரணங்கள் தெரியவரும், என் றார். இதனைத்தொடர்ந்து ஆனைமலை புலி கள் காப்பக கள இயக்குநர் ராமசுப்ரமணி யன் தலைமையில், துணை இயக்குநர் தேவேந் திர குமார் மீனா, உதவி இயக்குநர் கணேஷ் ராம், அமராவதி வனச்சரக அலுவலர் ஆகி யோர் முன்னிலையில், வன கால்நடை மருத் துவர்கள் விஜயராகவன், ராஜன், சொக்கப் பன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதன்பின் இறந்த ஆண் புலிக்கு சுமார் 9 வயது இருக்கும் என மருத்துவ குழுவின ரால் உறுதி செய்யப்பட்டது. மேலும், புலியின் இறப்பானது முள்ளம் பன்றியை வேட்டையா டும் பொழுது, அதன் முட்களால் அதன் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்பகுதியில் சீல் பிடித்த நிலை யில், வேட்டையாட முடியாத சூழ்நிலையில் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக்குழுவினரால் உறுதி செய்யப்பட் டது. மேலும், புலியின் கால், இரைப்பை பகுதி யில் முள்ளம் பன்றியின் முட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புலி யின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகி யவை எரியூட்டப்பட்டன.