ஈரோடு, ஏப். 8- திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாலை தடுப்பு சுவற்றில் ஒய்வு எடுக்கும் காணொளி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இவைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில் உலா வருகின்றன. இந்நிலையில் ஞாயி றன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை ஓரமாக உள்ள தடுப்புச் சுவற்றில் சிறுத்தை ஒன்று ஒய்வு எடுத்து கொண்டி ருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். இதை கண்ட சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் வைரலானது. திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நட மாட்டம் அதிகளவில் காணப்படும் எனவே திம்பம் மலைப் பாதை வழியாக அதிகாலை நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறு வனத்து றையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திவருகின்றனர்.