districts

img

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு

அவிநாசி, அக்.11- பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத் தில், புதனன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரபாளையம் அருகே குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா கோரி 57 நபர்கள் விண்ணப் பம் செய்தனர். இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிதிராவிடர் நத்தம் பிற்படுத்தப்பட்டோர் நத்த நிலங் களில் வழங்கப்படும் வீட்டுமனைகள் ஒப்படைப்புக்கான இணைய வழிபட்டா 40 நபர்களுக்கு கடந்த 18.1.2023  அன்று வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 நபர்களுக்கும் பல முறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.  இதுவரை பட்டா கிடைக்காததால் அடிப்படை வசதி கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை  தொடருமானால் அக்டோபர் 19 ஆம் காலை 10 மணி முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் எச்சரிக்கை செய்துள்ளனர். முன்னதாக துணை  வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். இவ் வியக்கத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகேஷ் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.