கோவை, செப்.14- ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை சொன்னால் நிதிய மைச்சருக்கு கோபம் வருகிறது, இதையேதான் அண்மையில் நிதின்கட்காரி கேட்டார், அப்போது பேசாத நிர்மலா சீதா ராமன் இப்போது பேசுவது ஏன் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி யுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனியன்று செல்வப் பெருந்தகை எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறுகையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் ஜி.எஸ்.டி குறைதீர்க்கும் நாளில் நடந்து கொண்ட விதம், சிறு நடுத்தர தொழில் செய்து ஒரு ஹோட் டல் உரிமையாளர் தனது கோரிக்கையை வைத்ததற்காக தனது அறையில் அழைத்து அவரை மன்னிப்பு கேட்க வைப்ப தும் அவரை நடத்திய விதமும் எல்லோரையும் கலங்கடிக்க செய்து உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சி யினரிடம், பொதுமக்களிடம், வணிகர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என குறைந்த பட்ச நாகரிகம் தெரியா மல், இவ்வாறு செய்திருப்பது அனைவரையும் வருத்ததிற் குள்ளாக்கி இருக்கிறது. இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மூன்று மேசைகளில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் இருப்பார் கள் அவர்களிடம் நிறைய குறைகள் இருந்தால் கூறுங்கள் என கூறியிருந்தார்கள். அதுக்கு தான் அன்னபூர்ணா சீனிவாசன் குறைகளை கூறியிருக்கிறார். இதில் என்ன பாதகம் இருக் கிறது. சிறிய குழந்தைகள் கூட வாங்க, போங்க என அழைக் கும் பண்பு உள்ள மண். அனைவருக்கும் மரியாதை சொல்லிக் கொடுக்கும் மண் கோவை. இந்த மண்ணில் இப்படியொரு அநா கரீகமான செயல் நடந்து இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையா ளர் என்பதற்காக அல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார தோரணையில் மிரட்டுவதும் மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை பொது வெளியில் வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நேரத்தில் நிதின்கட்காரி நிதிய மைச்சருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு கேலி இருக்கிறது. எவ்வளவு கிண்டல் இருக்கிறது. எவ்வளவு கண்டனக் குரல் கள் இருக்கிறது. நிதின்கட்கரியிடம், கோவை சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சரும் ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து கொண்டு, அவரை வரச் சொல்லுங்கள், கூனி குறுகி சாய்ந்து உட்காராமல் நுனி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிதின் கட்கரி கேட்பாரா? அவர்களை கேட்க வைக்க முடியுமா? அதை வீடியோ பதிவு செய்து வெளியிடுவார்களா? அப்போது நிதின்கட்காரிக்கு ஒரு நியாயம், சீனிவாசனுக்கு ஒரு நியாயமா? நிதின் கட்காரி விமர்சனம் செய்ததை விட அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் விமர்சனம் செய்து விட்டாரா? இருக்கின்ற குறையை கூறியி ருக்கிறார். நிதின் கட்காரி கேட்டதற்கும் அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சீனிவாசன் பண்பாக மிகவும் நாகரீகத்தோடு கேட்டு உள்ளார். திரைப் படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். திரைப்படத் தில் வில்லன்கள் படம் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு ஆவணமாக வெளியிடுவதைப் போல் தான் உள்ளது என விமர்சித்தார்.