திருப்பூர், ஆக. 19 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் பொங்கலூர் கிளை சார்பில் மாபெரும் கவிதைப் போட்டி ஞாயிறன்று பொங்கலூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வை பொங்கலூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அபிராமி அசோகன் தொடங்கி வைத்தார். 150க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள், அதிலும் பெரும்பான்மையாக பெண் படைப்பாளிகள் பங்கேற்று கவிதைகளை எழுதினர். கவிஞர் நறுமுகை, ஆசிரியர்கள் சம்பத்குமார், மணிகண்ட பிரபு, கவிஞர் குணசுந்தரி, பேராசிரியர் ராஜ்மோகன் ஆகி யோர் நடுவர்குழு உறுப்பினர்களாக கவிதைகளை தேர்வு செய்தனர். பிற்பகல் நிகழ்விற்கு பி.நாகராஜன் தலைமை வகித்தார். பி.வி.லீலா கிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் நோக்கவுரை நிகழ்த்தினார். முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கும், கவிப்பே ரரசு வைரமுத்துவின் மகாகவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர் நறுமுகைக்கும், மிருதுளா நடராஜன் பாராட்டி னார். இதைத்தொடர்ந்து, சாந்தினி சம்பத்குமார், சாந்தி ராஜேந்திரன், சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் கடலூர் கவி வெற்றிச்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் பாலபாரதி பரிசளித்தார். கவிஞர் மாரிமுத்து முதல் பரிசு 5 ஆயி ரம், கவிஞர் சங்கீதா இரண்டாம் பரிசு 3 ஆயிரம், கவிஞர் ஜெய லட்சுமி மூன்றாவது பரிசு 2 ஆயிரம் பெற்றனர். மேலும் ஐவர் ஆறுதல் பரிசு பெற்றனர். பங்கு பெற்றோருக்கு சான்றி தழ் வழங்கப்பட்டது. நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் நாட்டராயன் நன்றி கூறினார்.