மேட்டுப்பாளையம், செப்.18- குட்டை நீரில் பதுங்கியபடி கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலையை இரண்டுநாட்கள் தொடர் போராட்டத் திற்கு பின்னர் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்த னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிரா மத்தில் உள்ள குட்டை உள்ள இந்த பட்டக்காரனூர் கிராமத் தின் தடுப்பணை வழியாக பவானி ஆற்றினை சென்றடை யும் இந்த குட்டையில் அண்மையில் பெய்த கன மழையால் தற்போது வரை இந்த குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில், பெரிய முதலையொன்று அவ்வப்போது வெளியில் வருவதும் மீண்டும் குட்டைக்குள் சென்று மறைவதுமாக இருப்பதை கண்ட கிராம பொதுமக்கள் அச்சத்துடன் இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலகத்தில் புகார் அளித்த னர். குடியிருப்புகள் அருகே அமைந்துள்ள இந்த குட்டையில் கால்நடைகள் தண்ணீர் அருந்துவதாலும் உள்ளூர் பொது மக்கள் சிலர் குட்டை நீரில் மீன் பிடிப்பது குளிப்பது என்பது வழக்கம் என்பதால் வனத்துறை விரைந்து முதலையை பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிறுமுகை வனச்ச ரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் செவ்வாயன்று காலை முதல் குட்டைக்குள் பதுங்கி இருந்த முதலையை பிடிக்கும் பணியை துவங்கினர். முதலை உள்ள குட்டையை சுற்றி நைலான் வலையை கட்டிய வனத்துறையி னர் தற்போது இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். குட்டையில் அதிகள வில் தண்ணீர் இருந்ததால் செவ்வாயன்று காலை துவங் கிய பணி புதனன்று மதியம் தான் முடிந்து குட்டையில் நீர் குறைந்து முதலை வெளியே தெரிய வந்தது. இதனையடுத்து முதலையின் கழுத்து மற்றும் வாய் பகுதியை சுருக்கு கயிற்றால் கட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டது. பல முறை இதில் இருந்து தப்பிய முதலை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இறுதியில் வனத்துறை யினரின் கயிற்றில் சிக்கியது. இறுதியில் முற்றிலுமாக கயிற்றால் கட்டப்பட்ட முதலை வனத்துறையினரால் குட்டையில் இருந்து தூக்கி செல்லப் பட்டு வனத்துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப் பட்டது. கால்நடை மருத்துவரின் ஆய்விற்கு பின்னர் பிடிபட்ட முதலை பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் விடு விக்கப்பட உள்ளது.