சுவர் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
திருப்பூர், மே 5 - திருப்பூரில் சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.. மற்றொருவர் காயங்களு டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா (40). இவர் தனக்கு சொந்தமான கட்ட டத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (50), பிரவீன் (22) ஆகியோர் வேலை செய்து வந்தனர். வெள்ளி யன்று மதியம் இருவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கட்டடத்தின் சுவர் சரிந்து ராமமூர்த்தி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீனுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் ராமமூர்த்தி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இறந்துபோன ராமமூர்த்திக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
தை முன்னிட்டு திருப் பூரில் ஏஐடியுசி சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் காரல் மார்க்ஸின் 205ஆவது பிறந்தநாள் விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பனியன் ஃபேக்டரி லேபர் யூனியன் சங்க அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் காரல் மார்க்ஸ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொழி லாளர் ஒற்றுமை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்ட தொழிற்சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டனர்.
அரசுப் பள்ளி மாணவி காணவில்லை
திருப்பூர், மே 5 – திருப்பூர் விஜயாபுரம் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியை கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் காணவில்லை. பள்ளிச் சீருடையுடன் இம்மாணவி காணாமல் போனார். மாநிறம், முகம் நீள்வட்டம், இடது பக்க வாய் அருகில் தீத்தழும்பு இருக்கும். இவரது தந்தை பெயர் ம.தமிழரசு. இந்த சிறுமியை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சி யர் அலுவலக ஆறாவது தளம், திருப்பூர், தொலைபேசி எண்: 0421 2971198, தலைவர், குழந்தைகள் நலக்குழு, 220 கரட்டாங் காடு பேருந்து நிறுத்தம், தாராபுரம் சாலை, திருப்பூர், தொலை பேசி எண்: 0421 2424416 ஆகிய முகவரிகளில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மொபட் மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவி பலி
தாராபுரம், மே 5 - தாராபுரத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தை அடுத்துள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த வர் செல்வம். சாக்கு வியாபாரி. இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மகள் வித்யா (19). இவர் தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் கல்லூரி முடிந்ததும் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிந்தார். அப்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே வந்தபோது மதுரையில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் வித்யா ஓட்டி வந்த மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மொபட்டுடன் கீழே விழுந்த வித்யா பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வித்யாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வித்யா பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த அஸ்வின் (30) என்பவரை தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வித்யா படித்து வந்த கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
கானூர் புதூர், பசூரில் மே 8 மின் தடை
அவிநாசி, மே5- கானூர் புதூர், பசூரில் ஆகிய துணை மின் நிலையங்க ளில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்டபகுதிகளில் மே 8 காலை 9 மணி முதல மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரி யத்தினர் அறிவித்துள்ளனர். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கானூர், அல்லப் பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத் தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளை யம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்த நாயக்கன்பாளையம் ஒரு பகுதி. பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பா ளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவ பாளையம்.
போக்குவரத்துக்கு இடையூறான கேபிள் வயர்களை ஒழுங்குபடுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்
திருப்பூர், மே 5 - திருப்பூர் மாநகருக்குள் போக்கு வரத்துக்கு இடையூறாக அமைக் கப்பட்டுள்ள கேபிள் டிவி ஒயர்களை ஒழுங்குபடுத்துமாறு கேபிள் ஆப ரேட்டர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திருப்பூர் மாநகரில் வாகன போக் குவரத்துக்கு இடையூறாக கேபிள் டிவி ஒயர்களை முக்கிய ரோடுகள் வழியாக கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று திருப் பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகி யோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர பகுதிகளில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் போக்குவரத் துக்கு இடையூறாக மாநகரப் பகுதிக ளில் கேபிள்களை முறைகேடாக கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்த கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பை கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி நிர் வாகம் சார்பில் வழங்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உடனடி யாக போக்குவரத்திற்கு இடையூ றாக கொண்டு செல்லும் கேபிள் களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என மாநகராட்சி கமி ஷனர் பவன்குமார் கிரியப்பனவர் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு எச்ச ரிக்கை செய்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:28.08/60அடி நீர்வரத்து:7கன அடி வெளியேற்றம்:42கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:59.81/90அடி. நீர்வரத்து:242கனஅடி வெளியேற்றம்:12கன அடி
போராடியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், மே 5 - திருப்பூரில் இரும்பு உருக்காலைக்கு எதி ராக போராடியவர்கள் மீது காவல்துறை வன் கொடுமை வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போ ராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட் டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்ட னம் தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர், அனுப்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
திருப்பூரில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்
திருப்பூர், மே 5 - திருப்பூரில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, மதுவிலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு, போக்குவரத்து காவல், குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், குழந்தைகள் மற் றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா, உதவி ஆணையர்கள் அசோக்குமார், நல்லசி வம், நத்தினி, துணை காவல் கண்காணிப் பாளர்கள் ஜான்சன், சௌமியா (பல்லடம்), பால்ராஜ் (அவிநாசி), பார்த்திபன் (காங்கே யம்), தன்ராஜ் (தாராபுரம்), முத்துக்குமார், (உடுமலைப்பேட்டை) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், கூடுதல் கண்காணிப்பு அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நகை திருட்டு
கோவை, மே 5- கோவை மாவட்டம், சிங்காநல்லூர், கேபிஆர் லே-அவுட்டை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் புதனன்று வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ வில் வைத்திருந்த 2.5 பவுன் தங்க நகையை அடை யாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சாந்தி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையைதிருடிய நபரை தேடி வருகின்றனர்.
இளம் பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை
கோவை, மே 5- கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை, கணபதி ராஜீவ்காந்தி சாலையைச் சேர்ந்தவர் ரமேஷ் (31). இவரது மனைவி ரேவதி (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ரேவதி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள் ளார். இந்நிலையில், வியாழனன்று ரேவதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேவதியின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனைக்கு தேசிய சான்று?
தருமபுரி, மே 5- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தில்லியை சேர்ந்த மருத்துவக்குழுவினர் நேரில் ஆய்வு நடத் தினர். தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்து வமனை கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, 16 அறுவை சிகிச்சை அரங்குகள், சிடி ஸ்கேன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் 1,230 படுக்கை களுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அதிக பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரிவின் தரத்தை மேம்படுத்தவும், தரச் சான்று அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தில்லியில் உள்ள தேசிய உடல் நல ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பிந்து உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற் கொண்டனர். பிரசவ வார்டு, ரத்த வங்கி, ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை அரங்கங் கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் அளிக்கப்படும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சை அரங்குகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி, மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர் மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள் உடனிருந்தனர்.
கோயில் விழாவில் இரு சமூகத்தினர் மோதல்: ஒருவர் படுகாயம், வீடுகள் சூறை
சேலம், மே 5- சேலம் அருகே கோயில் திரு விழாவின்போது இரு சமூகத்தினரி டையே ஏற்பட்ட மோதலால் ஒரு படுகாயமடைந்தார். வீடுகள் சூறை யாடப்பட்டன. இதனால் அப் பகுதியில் காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், அயோத்தி யாபட்டினம் அடுத்துள்ள ஏரி புதூர் பகுதியில் இரு சமூகத்தினருக்கு சொந்தமாக கோயில் உள்ளது. இக் கோயிலில் கடந்த மூன்று தினங் களாக திருவிழா நடைபெற்றது. இதில் கடைசி நாளான வியாழனன்று இரவு தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இரு சமூகத்தின ருக்கும் தேர் இழுப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது தலித் சமூகத்தை சேர்ந்த விஜய் என்பவரை இன்னொரு சமுதாயத்தினர் அடி யாட்களை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, அங்கு கூடி யிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதனால், இரு தரப்பினருக் குமிடையே பெரும் மோதல் உரு வாகி, சிலரின் வீடுகள் சூறையாடப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த, சேலம் மாநகர காவல் துறையினர் மற்றும் ஆத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் நாகராஜ் தலைமையில், ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து, இருதரப்பினருடனும் காவ லர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று நூற்றுக்கணக்கான பொது மக்கள் காவல்துறையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, தாக்குதல் நடத்திய நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பதட்ட மாக சூழல் நிலவுவதால் 50க்கு மேற் பட்ட காவல் துறையினர் குவிக்கப் பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.
பசுமாட்டை கொன்ற சிறுத்தை
கோவை, மே 5- காரமடை அருகே பசுமாட்டை சிறுத்தை ஒன்று வேட்டை யாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ். இவர் 10 பசுமாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழனன்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை வனப்பகுதியினுள் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி இழுத்து சென்றுள்ளது. பசுமாட் டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது, சிறுத்தை பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவிந்தராஜ் காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை வனத்துறையினர், புதர் பகுதியில் வைத்து பசு மாட் டினை சிறுத்தை கடித்து கொன்று, ரத்தத்தை குடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்த பசுவை ஆய்வு செய்த போது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேறும், சகதியுமான சாலை
உதகை, மே 5- உதகை அருகே தொடர் மழையால் மண் சாலை தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. நீலகிரி உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குன்னூர் - மேட் டுப்பாளையம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், உத கையை அடுத்த கல்லட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல், உதகை அருகே உள்ள கோலணி மட்டம் முட்டிநாடு சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத அந்த சாலையில், நடந்து செல்லவே பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருவதால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பழமையான காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டது
பழமையான காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டது சேலம், மே 5- ஏற்காட்டில் 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலை யம் பழுதடைந்து காணப்பட்டது. இந்த காவல் நிலையத்தை இடித்துவிட்டு, புதிய காவல் நிலையம் கட்ட கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டன. உள்ளூர் சமூக ஆர் வலர்கள் வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த கட்டி டத்தை இடிக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்து, அந்த கட்டிடம் இடிக்காமல் விடப்பட்டது. இநத பழைய கட்டி டத்திற்கு பக்கத்திலேயே புதிய காவல் நிலையம் கட்டப்பட் டது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக இநத பழைய கட்டிடம் பாழ டைந்த நிலையில் இருந்தது. தற்போது ஏற்காடு காவல் ஆய் வாளராக செயல்படும் செந்தில்ராஜ் மோகன் என்பவரின் முயற்சியால், 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்படடது. இந்த கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக் குமார் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வெள்ளியன்று திறந்து வைத்தார். இந்த பழைய காவல் நிலையம் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று புகைபடம் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் தையல் நாயகி மற்றும் ஏற்காடு போலீசார், பொது மகக்ள் கலந்து கொண்டனர்.
விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம், மே 5- எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கதவணை யின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ள நிலையில், வியாழனன்று அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்த் தேக்க பகுதியில் சேலம் - ஈரோடு மாவட்டங்களை இணைக் கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்கு வரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வரு கின்றனர். கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் வழக்கம் போல் அணைப்பகுதியில் நீர் திறக்கப்பட்டு விசைப்படகு போக்குவரத்து நடைபெறும் என சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் தெரிவித்தனர்.
பட்டுக்கூடு விற்பனை
தருமபுரி, மே 5- தருமபுரியில் செயல் பட்டு வரும் ஏல அங்காடிக்கு வியாழனன்று 2,971 கிலோ பட்டுக்கூடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.515க்கும், குறைந்த பட்சமாக ரூ.339க்கும், சரா சரியாக ரூ.404.19க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து ஆயிரத்து 138க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயி களும், வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.