districts

img

சுற்றுலாத் தலமான அமராவதி நகரில் அவல நிலையில் பேருந்து நிறுத்தம்

உடுமலை, ஜூலை 31 - சுற்றுலாப் பயணிகள் தின மும் வருகை தரும் அமரா வதி அணை இருக்கும் அமரா வதி நகர் பேருந்து நிறுத்த  கட்டடத்தில் இருக்கைகள்  உடைத்து உள்ளதால் யாரும்  பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது. உடுமலை அமராவதி நகர்  மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா  தலமாக உள்ளது. இங்கு அமராவதி அணை, முதலை  பண்ணை, வனத்துறை பூங்கா மற்றும் சைனிக் பள்ளி  உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிக ளும், விடுமுறை காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து  செல்கிறனர். இந்நிலையில், இங்கு இருக்கும் பயணிகள்  நிழற்குடை கட்டிடம் கடந்த 21 – 22 ஆம் நிதி ஆண்டில் சுமார்  ரூபாய். 10 லட்சம் மதிப்பிட்டில் சட்டமன்ற உறுப்பினர்  நிதியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் முறையான பராம ரிப்பு இல்லாததால் கட்டிடம் கட்டி இரண்டு ஆண்டுகளில்  யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் மாறி உள்ளது. சுற்று லாத் தலத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக் கும் பேருந்து நிறுத்த கட்டிடத்தின் இருக்கைகளை ஊராட்சி  நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தெரி வித்தனர்.