districts

வியாபாரிகளை ஏமாற்றும் பட்ஜெட்

ஈரோடு, பிப். 2- வணிகர்களை ஏமாற்றும் ஒன்றிய  இடைக்கால பட்ஜெட் என தமிழ்நாடு  வணிகர் பேரமைப்பின் தலைவர்  விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள் ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. அனைத்து கடைகளி லும் தமிழில் பெயர் பலகை வைப் போம் என இளைஞர் அணி சார்பில்  நடைபெற்ற பேரணியை வீட்டுவசதி,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முன்னதாக விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் தமிழில் பெயர் பலகை இடம்பெற வேண்டும் என் பதை வலியுறுத்தியுள்ளார். அதனை  ஏற்று அனைத்து கடைகளின் பெயர்பலகையும் தமிழாக்கம் செய் யப்பட வேண்டும் என்பதை வலியு றுத்தி வெள்ளியன்று இருசக்கர வாகன பேரணி நடத்தினோம். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்று கிற பட்ஜெட்டாக இருக்கிறது. எந்த வொரு நிவாரணமும் செய்யப்பட வில்லை. சாதாரணமாக ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு  கேட்டிருந்தோம். ஜிஎஸ்டி வரிவிதிப் பில் மாற்றங்கள் கொண்டு வாருங் கள் என்று கேட்டிருந்தோம். அது சம்பந்தமாக எந்த பதிலும் வர வில்லை.  காலாவதியான டோல்கேட்டு களை 6 மாதத்தில் அகற்றுவோம் என்று சொல்லி இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி சொன்னார்.  ஆனால் சொன்னபடி எந்த டோல் கேட்டும் தமிழகத்தில் அகற்றப்பட வில்லை. பெரிய கார்ப்பரேட்டுக ளுக்கு இணையாக வருடா வருடம் வரி ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கி றது.  வெள்ளத்தால், மழையால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க வேண் டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாக வணிகர் பேரமைப்பின் கோரிக் கைகள் தொடர்பான அறிவிப்பை வரும் 6ஆம் தேதி வெளியிடுவோம் என்றார்.