districts

img

அரசுப்பள்ளி மாணவி எழுதிய புத்தகம் வெளியீடு

சேலம், டிச.2- சேலம் புத்தகத் திருவிழாவில், அரசுப்பள்ளி மாணவி எழுதிய புத்த கம் வெளியிடப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதா னத்தில் சேலம் புத்தகத் திருவிழா - 2024  நடைபெற்று வருகிறது. புத்தகத் திரு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக் கம் சார்பில் அரங்கம் எண்: 29, 30இல் அமைக்கப்பட்டுள்ள புக் ஃபார் சில்ட்ரன்  அரங்கில், பள்ளி மாணவி எழுதிய  புத்தகம் வெளியீட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொருளாளர் பிரபா வதி தலைமை வகித்தார். அப்போது, தலைவாசல் ஒன்றியம், பெரியேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அனுசியா, எஸ்.மோசஸ் பிரபு எழு திய “மௌலானா அபுல்கலாம் ஆசாத்” என்ற புத்தகத்தை வெளியிட, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மான்விழி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாணவி அனுசியா புத்த கத்தை வெளியிட்டு, அறிமுக உரையாற் றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் செங்கோட்டுவேல், செயலாளர் சுரேஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.