districts

img

நிர்வாகமே காரணம்: மாணவர்கள் போராட்டம்

கோவை, மே 18- கோவை சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் உயிரி ழந்ததற்கு நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலம், சவாய் மட பூரை சேர்ந்தவர் கமல் ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (23), ராஜஸ்தா னில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல் கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார். அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்ப வரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற் கொண்டு வந்தார். இந்நிலையில், செவ் வாயன்று இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். இதன் பின் அங்குள்ள உணவு கூடத்திலிருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானையை பார்த் ததும். விஷால் ஸ்ரீமல் அவரது நண்பர் களுடன் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை அவரை தூக்கி வீசி யதுடன் காலால் மிதித்தது. இதில் அவ ருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சி மாண வர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத் தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர். இதன்பின் பலத்த காயத்து டன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச் சைக்காக கேரள மாநிலம், புட்டத்துறை யில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின், மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில், புதனன்று காலை ஆராய்ச்சி மாண வர் விஷால் ஸ்ரீமன் சிகிச்சை பலனின்றி  பரிதாப உயிரிழந்தார். இதைத்தொ டர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாண வர் இறந்த தகவல் ராஜஸ்தானில் அவ ரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப் பட்டது. அவரது உறவினர்கள் கோவை வந்து அவரது உடலை பெற்றுக்கொண் டனர். இந்நிலையில், மாணவர் விஷால் உயிரிழப்பிற்கு ஆராய்ச்சி மைய நிர்வா கமே காரணமென குற்றஞ்சாட்டி, அங் குள்ள சலீம் அலி சிலை முன்பு மாணவர் கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாண வர்கள் கூறுகையில், விடுதியில் குடிநீர் கொடுக்காததால் கேண்டீனுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி யுள்ளது. விடுதியிலிருந்து கேண்டீன்  600 மீட்டர் தொலைவில் உள்ள நிலை யில், அவ்வழியில் மின் விளக்குகள் வசதியில்லை. டார்ச்லைட் கேட்டதற்கு கூட நிர்வாகம் கொடுக்கவில்லை. விஷால் உயிரிழப்பிற்கு யானை கார ணம் அல்ல, முறையான நிர்வாகமின் மையே காரணமெனவும், விஷால் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும், என்ற னர்.