தருமபுரி, டிச.26- மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி மேலாளரை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தி னர் தீர்த்தமலையிலுள்ள கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்த மலையில் உள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கனரா வங்கி, மாற் றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு கடன் நிபந் தனையின்றி வழங்க வேண்டும். மேலும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக் கும், தனி நபர் கடன், தாட்கோ மானியக் கடன் வழங்க வேண்டும். கனரா வங்கியில் 400க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ள வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனரா வங்கி யில் பணிபுரியும் வங்கி மேலாளர் தன்னிச்சை யாக செயல்பட்டு வருகிறார். மாற்றுத்திற னாளிகள் மற்றும் ஏழை மக்களின் கல்விக் கடனை கட்டாவிட்டால் வீடு, சொத்துகளை ஜப்தி செய்வதாக மிரட்டுகிறார். எனவே வங்கி மேலாளர் மிரட்டுவதை கைவிட வேண் டும், என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தீர்த்தமலையிலுள்ள கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாற் றுத்திறனாளிகள் சங்க முன்னாள் ஒன்றியத் தலைவர் கே.காந்தி தலைமை வகித்தார். இதில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டச் செயலாளர் எம்.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் ஜி.தமிழ் செல்வி, மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை, விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஆர்.குமரேசன், நிர்வாகிகள் பி.வீரப் பன், சி.வேலாயுதம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேச்சுவார்த் தைக்கு அழைத்த வங்கி மேலாளர் தமிழ் செல்வி, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதாக உறுதியளித்தார். முடிவில், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி மகேந் திரன் நன்றி கூறினார்.