districts

img

திருப்பூரில் கனமழையால் 70 வருட பழமையான மரம் முறிந்தது

திருப்பூர், அக்.15 - திருப்பூர் பூங்கா சாலையில் 70 வருட  பழமை வாய்ந்த மரம் சாய்ந்ததில்  மின் சாரம் தடைப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூரில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் திருப்பூர் குமரன் சாலை ராயபுரம், குமரப்பபுரம், பெத்தி  செட்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கன மழை பெய்தது. இந்நிலை யில் பூங்கா சாலையில் 60 வருடங்க ளுக்கு மேலான பழமை வாய்ந்த வேப்ப  மரம் அடியோடு முறிந்து விழுந்தது. இதில்  மின்கம்பம் சாய்ந்ததோடு, மின் சார வயர்கள், கேபிள் வயர்கள் உள்ளிட் டவைகள் முற்றிலும் அருந்து விழுந் தது. அதே போல் நடை பாதை முழுவ தும் சேதம் அடைந்தது . இதன் காரண மாக பார்க் சாலை, நடராஜா தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம்  துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையின் நடுவே மரம் விழுந்த காரணத்தினால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.