மேட்டுப்பாளையம், ஜூலை 10- காரமடை அருகே இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 9 பேரை வனத் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் பகுதியில் யானை தந்தங் களை சிலர் விற்க முயன்று வரு வது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து. இதன் அடிப்படை யில், மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் வனத்துறை யினர் இணைந்து எடுத்த கூட்டு நடவ டிக்கையில் ஈடுபட்டனர். இதனைய டுத்து கோடதாசனூர் என்னும் கிரா மத்தில் வசிக்கும் நாகராஜன் என்ப வரது வீட்டில் வைத்து சட்ட விரோத மாக விற்க முயன்ற இரண்டு தந்தங் கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர் பாக நாகராஜனுடன் ஏழுசுழி கிரா மத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி, ராம மூர்த்தி, பிரபு, குமரேசன், அஜித், ரஞ் சித் மற்றும் காரமடையை சேர்ந்த ஆறுமுகம், சிருமுகையை சேர்ந்த பாபு ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு காரமடை வனச்சரகத்திற்குட் பட்ட கட்டாஞ்சி மலை பகுதியில் ஆண் காட்டு யானையொன்று இறந்து கிடப்பதை கண்டு அதன் சடலத்தில் இருந்து தந்தங்களை திருடி சென்று பதுக்கியுள்ளதும் தற்போது அதனை விற்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து வன சட்டப்படி கைது செய்யப்பட்ட இவர்களின் வாக் குமூலத்தின் அடிப்படையில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் யானையின் தாடை எலும்பு பகுதி களை வனத்துறையினர் கைப்பற்றி வனத்துறையின் மருத்துவக்குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கைது செய்யப்பட்டவர் களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.