சேலம், ஜூலை 13- சேலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர் விற்கு 9,406 பேர் தேர்வு எழுதினர். 4063 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார் பில் குரூப் - 1 தேர்வு சனியன்று நடைபெற்றது சேலம் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 47 தேர்வு கூடங் களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 13 ஆயிரத்து 469 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9,406 தேர்வர்கள் கலந்து கொண்டனர். 4063 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனிடையே, தேர்வு எழுதும் மையங்க ளில் ஒன்றான சேலம் சிஎஸ்ஐ பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்வாணையத்தின் விதி முறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடை தாள்களை சேகரித்தல், தேர்வு எழு தும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். முறைகேடு ஏதும் நடைபெறா மல் இருக்க கண்காணிப்புப் பணியில் 47 அறை கண்கா ணிப்பாளர்கள், 47 தலைமை கண்காணிப்பாளர்கள், நட மாடும் கண்காணிப்பு குழுக்கள், நான்கு பறக்கும் படை கள், 12 கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டிருந்த னர்.