districts

img

லாரி மோதியதில் 8 மின்கம்பங்கள் சேதம் மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் அவதி

தருமபுரி, பிப்.25- பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தில் தறி கெட்டு ஓடிய சரக்கு லாரி மோதியதில் 8 மின்கம்பங்கள் சேத மடைந்ததால், பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜக்க சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் திருமூர்த்தி (40). இவர் தனக்கு சொந்தமான சரக்கு லாரியில் சனியன்று மாலை அதிக அளவிலான பாரத்தை ஏற்றி கொண்டு, மல் லுப்பட்டி கிராமத்திலிருந்து மாண்டஅள்ளி நோக்கி, ஜக்க சமுத்திரம் கிராமம் வழியாக அதிவேகத்தில் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனிடையே, ஜக்கசமுத்திரம் விநாயகர் கோவில் முதல் கூட்டுறவு வங்கி வரை ஒன்றின்பின் ஒன்றாக சாலையோ ரம் இருந்த 8 மின்கம்பங்கள் மீது லாரி மோதியதில், அவை இரண்டாக உடைந்து, அருகிலிருந்த கூரை வீட்டின் மீது சாய்ந்தன. இதுகுறித்து ஜக்கசமுத்திரம் மின்வாரியத் திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவத்தனர். உடனடி யாக மின் விநியோகத்தை துண்டித்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு செயல்முறை தேர்வு நடைபெற்று வருவதால், மின்சார மின்றி மாணவ, மாணவிகள் படிக்க மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். ஆனால், இச்சம்பவம் குறித்து இதுவரை மின்வாரி யம் சார்பிலும், காவல் துறை சார்பிலும் எந்தவொரு புகாரும் பதிவு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை யும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.