districts

img

78 ஆயிரம் பேர் காணொளி காட்சி மூலம் யோகா

கோவை, ஆக,13-  சுதந்திர தினத்தையொட்டி 240 பள்ளி களில் பயிலும் 78,000 மாணவ, மாணவி யர்கள் காணொளி காட்சி மூலம் இணைந்து ஒரே நேரத்தில் 78 வினாடி கள் யோகா செய்து அசத்தியுள்ளனர். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை  முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள  240-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 78 ஆயிரம் மாணவர்கள் ஒரே  நேரத்தில் காணொளி காட்சி வாயிலாக  இணைந்து யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.  கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத் தில் பள்ளி மாணவ, மாணவிகள் பத்மாச னத்தில் அமர்ந்து, இரு கைகளிலும் தேசி யக் கொடியை உயர்த்திப் பிடித்து  78 விநாடிகள் தொடர்ந்து யோகா செய்த னர். இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் (WRU) உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விலிருந்து வந்த WRU மேலாளர் கிறிஸ் டோபர் டெய்லர் கிராஃப்ட் நேரடியாக இந்த நிகழ்வை கண்காணித்து சான்றி தழ் வழங்கினார். இதுகுறித்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட கோவை மற்றும்  திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறும் போது,  இந்த சாதனை மூலம் தேசிய ஒருமைப் பாட்டையும், யோகா மூலம் உடல்நலம்  மற்றும் மன அமைதியைப் பேணுவதை யும் வலியுறுத்தியுள்ளோம். இந்த உலக  சாதனையில் முக்கிய பங்கு வகித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.