திருப்பூர், செப்.17- இந்திய தேசிய ராணுவத்தின் காலாட்படை 110 ஆவது படைப்பிரி வும், கோடங்கிபாளையம் ஊராட்சி மன் றமும் இணைந்து, இந்திய ராணுவத் தின் 110 ஆவது காலாட்படை பிரிவின் 75 ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட் டத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் ஊராட்சியில் செவ்வாயன்று இந்திய தேசிய இராணு வத்தின் காலாட்படை 110 ஆவது படைப் பிரிவின் சார்பில் 75 ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட்டம் நடைபெற் றது. மகிழ்வனம் தாவரவியல் பூங்கா வில் நடைபெற்ற இக்கொண்டாட்டத் தில் 400க்கும் மேற்பட்ட மரக்கன்று கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் முனைவர் கா.வீ.பழனிச் சாமி தலைமை வகித்தார். கோடங்கிபா ளையம் ஊராட்சிப் பணிகள் குழுத்தலை வரும், மகிழ்வனம் தாவரவியல் பூங்கா செயலாளருமான சோமு (எ) பாலசுப்பி ரமணியம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் இந்திய தேசிய ராணு வத்தின் காலாட்படை 110 ஆவது கோவை பிரிவின் தளபதி கர்னல் ஹரீஸ் ராமச்சந்திரன், துணைத் தளபதி லெப்டி னன்ட் கர்னல் விக்ரம் சிங் யாதவ் ஆகியோர், 30 இராணுவ வீரர்களுடன் கலந்து கொண்டனர். மகிழ்வனம், பாரதி வனம், தலைவர் வெங்கடாசலம் வனம் ஆகிய கோடங்கிபாளையம் ஊராட்சி யின் வனங்களில் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வை ராணுவப் படை கர்னல் ஹரீஸ் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். உதயகுமார் - தர் ஷினி ஆகியோரின் திருமணத்தை முன் னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து மகிழ்வன தாவரவியல் பூங்கா கருத்த ரங்கு கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.