districts

img

மக்களை தேடி மருத்துவ திட்டம் தருமபுரியில் 75,751 பேர் பயன்

தருமபுரி, பிப்.24- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தருமபுரி மாவட் டத்தில் 75 ஆயிரத்து 751 பயனாளிகள் பயனடைந்துள்ள னர் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள் ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 321 நபர்கள் உயர் இரத்த அழுத்த சிகிச்சை பெற்றுள்ளனர். 17 ஆயிரத்து 388 நபர்கள் நீரிழிவு நோய் சிகிச்சையையும், 7 ஆயிரத்து 979 நபர்கள் உயர் ரத்த அழுத்தம் நோய் சிகிச்சையும் பெற்றுள்ள னர். 4 ஆயிரத்து 402 நபர்கள் இயன்முறை சிகிச்சையும், 4 ஆயிரத்து 661 நபர்கள் இதர நோய்க்கான சிகிச்சை என மொத்தம் 75 ஆயிரத்து 751 பயனாளிகள் இந்த “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.